Monday May 25, 2026

கட்வாஹா ஏக்லா கோவில், மத்தியப் பிரதேசம்

முகவரி

கட்வாஹா ஏக்லா கோவில், மத்தியப் பிரதேசம்

இறைவன்

இறைவன்: விஷ்ணு

அறிமுகம்

கட்வாஹா என்பது மத்திய பிரதேசத்தின் அசோக்நகர் மாவட்டத்தில் அமைந்துள்ள சிறிய கிராமம். எட்டாம்-ஒன்பதாம் நூற்றாண்டின் போது மிக முக்கியமான சைவ மையமாக இருந்தது, ஏனெனில் மட்டாமையுரா சைவ பிரிவின் அடித்தளங்கள் இங்கு மட்டுமே போடப்பட்டதாக நம்பப்படுகிறது. கட்வாஹாவில் மணற்கல் கட்டுமானத்தில் பதினைந்து கோவில்கள் உள்ளன. அனைத்து கோவில்களும் ASI (இந்திய தொல்பொருள் ஆய்வு) பாதுகாப்பில் உள்ளன.

புராண முக்கியத்துவம்

ஏக்லா கோவில் – கட்வாஹா கோவில்களின் இரண்டாம் கட்டத்திற்கு சொந்தமானது. கிழக்கு நோக்கிய இந்த கோயில் உயரமான ஜகதி (மேடை) மீது திரிரத பாணியில் கட்டப்பட்டுள்ளது. இது கோபுரம் மற்றும் தாழ்வாரம் இல்லாமல் உள்ளது, ஏனெனில் காலத்தின் மாற்றத்தினால் இவை அழிந்துவிட்டது. இந்த கோவில் விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது, அவர் கதவு மையத்தில் பிரம்மா மற்றும் சிவனுடன் செதுக்கப்பட்டுள்ளார். எனினும், தற்போது கருவறைக்குள் சிவலிங்கம் உள்ளது. கருவறை அதன் தெற்குச் சுவரில் இரண்டு படங்களைத் தவிர, வேறெதுவுமில்லை. விஷ்ணு ஆனந்தசயன கோலத்திலும், மற்றொரு படம் குழந்தையுடன் ஒரு பெண்ணையும் சித்தரிக்கிறது, அநேகமாக கிருஷ்ணரின் பிறப்பைக் குறித்திருக்கலாம். நிற்கும் நிலையில் ஒரு தாயும் குழந்தையும் அதன் வடக்கு சுவரில் காட்டப்பட்டுள்ளது.

காலம்

8 ஆம் நூற்றாண்டு

நிர்வகிக்கப்படுகிறது

இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ASI)

அருகிலுள்ள பேருந்து நிலையம்

கட்வாஹா

அருகிலுள்ள இரயில் நிலையம்

அசோக்நகர்

அருகிலுள்ள விமான நிலையம்

குவாலியர்

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top