Thursday Sep 18, 2025

நெல்வாய்பாளையம் பெருமாள் கோயில், காஞ்சிபுரம்

முகவரி

நெல்வாய்பாளையம் பெருமாள் கோயில், நெல்வாய்பாளையம், லத்தூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம்- 603 305.

இறைவன்

இறைவன்: பெருமாள்

அறிமுகம்

தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள லத்தூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது இந்த நெல்வாய்பாளையம் கிராமம். நெல்வாய்பாளையம் என்ற இக்கிராமத்தில் உள்ள பெருமாள் ஆலயம் முற்றிலும் சிதிலமடைந்த நிலையில் காணப்படுகிறது. மிகுந்த சிரமத்தோடு இந்த ஆலயத்திற்குள் நுழைந்து பார்த்தால் மூலவர் மற்றும் எந்த சுவாமி சிலைகளும் இல்லை. கருவறை விமானம் இடிந்து விழுந்துள்ளது. புடைப்பு சிற்பங்கள் தூண்களில் காணப்படுகின்றன. சுவாமி சிலையை யாரோ திருடி சென்றுவிட்டதாக சொல்கிறார்கள் இங்குள்ளவர்கள். தொடர்புக்கு திரு ஏழுமலை-9629503632, திரு முருகேசன்-9787415648. இங்கிருந்து கூவத்தூர் 8 கி.மீ தொலைவில் உள்ளது. மதுராந்தகம்- கடலூர் பேருந்து மூலம் இங்கு வரலாம்

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

நெல்வாய்பாளையம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

மதுராந்தகம்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
lightuptemple

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top